காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை(27) அதிகாலை 2.00 மணியளவில் டிப்பர் வாகனம் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கல்முனையிலிருந்து மட்டக்களப்புக்கு குறித்த வாகனம் சென்று கொண்டிருக்கையிலே பாதையயை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது. இதனால் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதுடன் சாரதி மற்றும் உதவியாளர்களுக்கு சிறுகாயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.
0 Comments:
Post a Comment