4 Nov 2020

கொரோனா சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாதோரை கைது செய்ய மட்டுநகரில் இராணுவத்தினர் பொலிசார் சோதனை நடவடிக்கை

SHARE

கொரோனா காதார நடைமுறைகளைப் பின்பற்றாதோரை கைது செய்ய  மட்டுநகரில் இராணுவத்தினர் பொலிசார் சோதனை நடவடிக்கை.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளைப் பின் பற்றாதவர்களைக் கண்டறிய மட்டக்களப்பு நகரில் இராணுவத்தினரும் பொலிசாரும் பல முக்கிய இடங்களில் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

முகக்கவசம் அணியாத பலர் இந்நடவடிக்கையின் போது மடக்கிப் பிடிக்கப்பட்டு அவர்களது முழுத் தகவல்களும் பொலிசாரினால் திரட்டப்பட்டன.

பல இடங்களில் பொலிசார் வாகனங்களையும் சோதனையிட்டு வருகின்றனர்.

மட்டககளப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள் நாளாந்தம் இனங்காணப்பட்டு வருவதையடுத்து சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் கடுமைக்கபட்டுள்ளன.

இம்மாவட்டததில் இதுவரை 41 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.



















SHARE

Author: verified_user

0 Comments: