களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர் இணைந்து காத்தான்குடியில் கிருமி நாசினி விசிறும் நடவடிக்கை.
கெவிட் - 19 எனப்படும் கொரோனா தொற்று காரணமாக மட்டக்களப்பு மாவட்டமும் முற்றாக பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தின் கீழ் முடங்கியிருக்கும் இந்நிலையில் மாவட்டத்தில்; அரச நிருவாகக் கட்டமைப்பினர், மற்றும் முப்படையினரும், இணைந்து பல்வேறுபட்ட சுகாதார முன்னாயர்த்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு அங்கமாக களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படையினர், காத்தான்குடி நகரசபை, பொலிசார், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், உள்ளிட்ட பலரும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (19) காத்தான்குடிப் பிரதேசத்தில் கிருமிநானிசினி விசிறி சுத்தம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது பேரூந்து தரிப்பிடங்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளும் பணிமனைகள், பொதுக் கட்டடங்கள், உள்ளிட்ட பல இடங்களிலும், இக்கிருமிநாசினி விசிறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment