வைத்தியர் நாகமுத்து பன்னீர்செல்வம் எழுதிய புனித சமாதானம் நூல் வெளியீட்டு விழா கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் (29) சனிக்கிழமை இடம்பெற்றது.
நூலுக்கான நயவுரையை மாமாங்கம் ஜீவரெட்ணம் ஆரிசியர் வழங்கினார். ஏற்புரையை நூலின் ஆசிரியர் நிகழ்த்தினார்.
இதன்போது, நூலாசிரியரினால் கடந்த காலங்களில் வெளியிடப்பட்ட தடம், விதைப்புக்களின் அறுவடையே தொற்றா நோய்கள், என்ற நூல்களின் பிரதிகளும் அதிதிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
மேலும், பிரதேசத்தில் இருந்து கற்று பொறியியல், மருத்துவம், உயிரியல் போன்ற துறைகளுக்கு தெரிவானவர்களும், சிறந்த சமூகப்பணியாற்றியவர்களும், முன்னாள் அதிபர்களும் இதன்போது பொன்னாடை போர்த்தி, பாராட்டி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment