தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகப்பிரிவில் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக இரா.தசோதரன் தெரிவு செய்யப்பட்டார்.நேற்று நடைபெற்ற இத் தேர்தல் வாக்களிப்பின் அடிப்படையில் 270 வாக்குகளைப்பெற்று செங்கலடியைச் சேர்ந்த இரா.தசோதரன் அமோக வெற்றிபெற்றுள்ளார்.
இத் தேர்தல் வெற்றி தொடர்பாக நாம் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள இரா.தசோதரன் அவர்களை தொடர்ப்பு கொண்ட போது அவர் தெரிவிக்கையில் நிச்சயமாக நான் இத் தேர்தலில் வெற்றிபெறுவேன் என்ற முழு நம்பிக்கை இருந்ததாகவும் எமது பிரதேச இளைஞர்கள்ளின் ஆதரவுடன் அவர்களின் வேண்டுகேளுகினங்கவே தாம் இந்த போட்டியில் களமிறங்கி வெற்றிபெற்றதாகவும் தெரிவித்த அவர் தமக்கு கிடைத்துள்ள இவ் சந்தர்ப்பத்திதை முழுமையாகப்பயன்படுத்தி இளைஞர்களுக்கான சிறந்த சேவையை சிறப்பாகவும் ஆற்றவுள்ளதாகவும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment