சிவில் சமூக அரங்கம் அங்குரார்ர்ப்பணம்.சிவில் சமூக அரங்கத்தை மட்டக்களப்பில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (08) கூட்டுறவு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
சிவில் அரங்கத்தின் ஏற்பாட்டாளர் சமன் செனரத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சேவைசெய்கின் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது நாடு தழுவிய ரீதியில் சிவில் சமூக அரங்கம் எவ்வாறு செயற்பட வேண்டும், நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுள் சிவில் சமூக அரங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 10 அம்ச கொள்கைகளை ஏறுக்கொள்கின்ற ஜனாதிபதி வேட்பாளருக்கு வாக்குகளைப் பெற்றுக்கொடுக்குமாறு சிவில் அரங்கத்தில் பிரதிநிதித்துவப் படுத்தும் 112 நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கோருவதா பிரசுரங்கள் வினியோகிக்கப் பட்டன.
0 Comments:
Post a Comment