மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி - தேசியப்பாடசாலையின் வருடாந்த இல்லவிளையாட்டுப் போட்டி வெபர் மைதானத்தில் அதிபர் பயஸ் ஆனந்தராஜா தலைமையில் புதன்கிழமை (29) நடைபெற்றது.
இறுதி நிகழ்வில், மட்டக்களப்பு மறை மாவட்ட பேராயர் கலாநிதி யோசப் பொன்னையா, இராணுவத்தின் கிழக்குப் பிராந்திய கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் கே.பி.அருண ஜயசேகர உள்ளிட்ட அதிதிகள் அழைத்து வரப்படுவதையும்.
மாணவர்களின் உடற் பயிற்சிக் கண்காட்சியையும், கிழக்கு மாகாண கட்டளைத்தளபதிக்கு நினைவுச் சின்னம் அதிபரால் வழங்கி வைக்கப்படுவதையும் வெற்றிபெற்ற இலப் பொறுப்பாசிரியருக்கு மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் வெற்றிக்கிண்ணம் வழங்கி வைப்பதனையும் படங்களில் காணலாம்.
0 Comments:
Post a Comment