மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்வி பணிப்பாளராக மீண்டும் நகுலேஸ்வரி-புள்ளநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை 11.12.2018 இவர் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனையில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றிய ஆர்.சுகிர்தராஜன் கடந்த 09 ஆம் திகதி ஓய்வு பெற்றதையடுத்து ஏற்பட்டிருந்த வெற்றிடத்திற்கே நகுலேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கெனவேயும் பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றியவராகும்.
0 Comments:
Post a Comment