25 Oct 2018

பிரதேச அபிவிருத்திக் குழு இணை தலைவர்களாக இருவர் நியமனம்

SHARE
மாட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மூன்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கான பிரதேச அபிவிருத்திக் குழுக்களுக்கு புதிய இணைத் தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். 
அந்தவகையில், கோரளை பற்று மேற்கு பிரதேச செயலக அபிவிருத்திக் குழு இணைத்தலைவராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாழைச்சேனை அமைப்பாளர் மீரா சாஹிம் ஹாரூன் நியமிக்கப்பட்டுள்ளார். 

அத்துடன், மண்முனை தென் மேற்கு பிரதேச செயலக அபிவிருத்திக் குழு மற்றும் போரைத்தீவு பற்று பிரதேச செயலக அபிவிருத்திக் குழு ஆகியவற்றின் இணைத் தலைவராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் இ.தவஜானசூரியம் நியமிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 Comments: