கரிடாஸ் எஹேட் இலங்கை – செடெக் நிறுவனத்தின் 50 வது ஆண்டு நிறைவையொட்டி மட்டக்களப்பு – அம்பாறை மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் திங்கட் கிழமை (28) கல்முனையில் நடைபெற்ற சமாதனம் மற்றும் நல்லிணக்கத்தை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிக்கும் நோக்குடன் ஒழுங்கு செய்திருந்த விவாதப் போட்டியில் பட்டிருப்பு தேசிய பாடசாலை, களுவாஞ்சிகுடி மாணவர்கள் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
விவாதப் போட்டியில் கலந்து கொண்ட க.அபினயா, பி.லிசாகரி, வி.குவினா ஆகிய மாணவிகளுக்கும் பொறுப்பாசிரியர் சுதர்சனுக்கும் பாடசாலை அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா உத்தியோஸ்தர்கள், பாடசாலை அபிவிருத்தி சபை மற்றும் பழைய மாணவர் சங்கம் தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment