கடந்த 3 வருடகாலமாக கிழக்கு இளைஞர் முன்னணி எனும் அமைப்பு நடாத்திய இலவசக் கல்விக் கருத்தரங்கிற்கு மட்டக்களப்பிலிருந்து இயங்கிவரும்
ஒக்போர்ட் கல்லூரி அனுசரணை வந்துள்ளது. இதனை பாராட்டும் முகமாக கடந்த ஞாயிற்றுக் கிழமை (20) மட்.பட்.கோவில போரதீவு விவேகானந்தா வித்தியாலயத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் ஒக்போர்ட் கல்லூரியின் முகாமைத்துவப் பணிப்பாளர் மகேந்திரன் ஜெகவண்ணன் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசனினால் விருது வழங்கிக் கௌரவிக்கப் படுவதையும் அருகில் பிரதியமைச்சர் அலிசாஹிர் மௌலானா, நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி, கிழக்கு இளைஞர் முன்னணியின் தலைவர் க.கோபிநாத் ஆகியோர் நிற்பதையும் படத்தில் காணலாம்.
0 Comments:
Post a Comment