25 Mar 2018

ஆனந்தசுதாகரனுக்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரி களுவாஞ்சிகுடியில் கையெழுத்துச் சமர் முன்னெடுப்பு.

SHARE
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த அரசியல் கைதி சச்சியானந்தம் ஆனந்தசுதாகரனை அவரது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உடனடியாக நிபந்தனைகளின்றி பொதுமன்னிப்பு வழங்கி பரவலாக  பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறும் நடவடிக்கைகள் முன்நெடுக்கப்பட்டுள்ள இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியிலும் அப்பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து பொதுமக்களிடம் கையெழுத்திப் பெறும் நடவடிக்கையை முன்நெடுத்துள்ளனர்.
ஞாயிற்றுக் கிழமை (25) களுவாஞ்சிகுடி பொதுச்சந்தைக்கு முன்பாக இடம்பெற்ற இக்கையெழுத்துச் சமரில் பொதுமக்கள், அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள், உள்ளிட்ட பலரும் ஆர்வதுடன் கலந்து கொண்டு கையெழுத:துக்களை இட்டனர்.

இவ்வாறு மக்களிடம் பெறப்படும் கையெழுத்துக்களைத் திரட்டி உரிய கோரிக்கை அடங்கிய கடித்துடன் ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ளதாக இதன் ஏற்பாட்டார்கள் தெரிவித்தனர்.























SHARE

Author: verified_user

0 Comments: