கிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்தி சபையினால் மட்டக்களப்பு சின்னவத்தைக் கிராமத்தில் அமைந்துள்ள நாம் தமிழர் பண்பாட்டு கழகத்தின் ஒழுங்கமைத்தலில் உழவர் திருநாள் - 2018 நிகழ்வு சின்னவத்தை கிராமத்தில் ஞாயிற்றுக் கிழமை (28) நடைபெற்றது.
கிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்தி சபையின் தலைவர் த.துஷ்யந்தன் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு ஓய்வு பெற்ற கோட்டக்கல்வி அதிகாரி பூ.பாலச்சந்திரன் மட்டக்களப்பு மாவட்ட செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் கி.குணநாயகம் வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலய அதிபர் எஸ்.கனேசமூர்த்தி, சிவஸ்ரீ ஜெகதீஸ்வர குருக்கள் சபையின் செயலாளர் ம.கலாவதி நாம் தமிழர் பண்பாட்டு கழகத்தின் தலைவர் கோ.பிரசாத் மற்றும் அதன் உறுப்பினர்கள் ஆலயங்களின் நிர்வாக உறுப்பினர்கள் விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள் சின்னவத்தை பாலாச்சோலை மற்றும் ஆணைகட்டியவெளி அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சின்னவத்தை கிராமத்தின் முகவாயிலில் அமைந்துள்ள சேள மன்னனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதிதிகள் கௌரவிக்கப்பட்டு மாட்டு வண்டில் பாரம்பரிய முறைப்படி பவனிவர உழவர்கள் அதனை தொடர அடுத்த தலைமுறைக்கு எமது கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் விட்டுச்செல்ல அறநெறிப்பாடசாலை மாணவ செல்வங்களும் ஆசான்களும் மக்கள் கூட்டமும் அணி தொடர ஊர்வலமாக சென்று நாகதன்பிரான் ஆலயத்தைச் பவனி சென்றடைந்தது.
பின்னர் பாரம்பரிய கலாசார முறைகளுக்கமைய மர உரலில் நெல் இட்டு உலக்கையினால் குற்றி அதனை புடைத்து மண் பாணையில் பால் ஊற்றி பொங்கி வழிய அரிசியினை ஆலய இந்து மதகுரு மற்றும் அதிதிகள் அரிசியினை இட்டு பொங்கல் இடம்பெற்றது.
இதன்போது அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும், அதிதிகளின் கருத்துரைகளும், இடம்பெற்றதைத் தொடர்ந்து, மிகவும் கஷ்ட்டத்தின் மத்திக்கத்தில் கல்வியில் சாதனை படைத்த தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளின் பிள்ளைகளும் இதன்போது கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment