1 Dec 2017

இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சிக் கருத்தரங்கு

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவணதீவு பிரதேசத்தில்இளைஞர் யுவதிகளுக்கு தொழிற் பயிற்சிகளை வழங்கும் பொருட்டு தொழிற் பயிற்சி நெறிகள் பற்றி விளக்கமளிக்கும் ஒருநாள் கருத்தரங்கு வவுணதீவுப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வியாழக்கிழமை 30.11.2017 இடம்பெற்றது.
தொழிற்பயிற்சி நிலையப் பொறுப்பதிகாரி ஆர். தாஹிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வவுணதீவு பிரதேச சமுர்த்தி தலைமை முகாமையாளர் ரி. சத்தியசீலன்,  தொழிற்பயிற்சி அதிகாரசபை மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.டி.எம். நளீம், மட்டக்களப்பு தொழிற்பயிற்சி மாவட்ட இணைப்பாளரும் மட்டக்களப்பு தொழிற்பயிற்சி நிலைய அதிபருமான கே.பிரேமரஞ்சன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



SHARE

Author: verified_user

0 Comments: