தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் 12 வது நினைவு நிகழ்வு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணியின் ஏற்பாட்டில் எதிர்வரும் 25 அம் திகதி மாலை 02.00 மணிக்கு மட்டக்களப்பு, அரசடி தேவநாயகம் மண்டபத்தில் இளைஞர் அணித் தலைவர் கி.சேயோன் தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், அமரரின் குடும்பத்தினர், ஆதரவாளர்கள், பொதுமக்கள், எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வின் அறிமுகவுரையை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் மாகாண அமைச்சருமான கி.துரைராசசிங்கம் ஆற்றவுள்ளதுடன், நினைவுப் பேருரையை “இலங்கைத் தமிழர் அரசியலில் நழுவிய வாய்ப்புக்களும், நடப்பியல் அரசியலும்” எனும் தலைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் நிகழத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் 2005 ஆம் ஆண்டு புனித நத்தார் தினத்தன்று மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் இடம்பெற்ற நள்ளிரவு ஆராதனையின் போது துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment