பதவியிலிருந்தபோது வாழ்வாதாரங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியுதவியினால் முற்றுமுழுதாக மக்களின் வாழ்தாரத் தேவையினைப் பூர்த்தி செய்துவிட முடியாது. ஆனாலும் எமது உதவிகளை வைத்துக் கொண்டு பயனடைந்த மக்கள் சிறிதளவேனும் அவர்களது வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியும்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்தார். மேற்படி மார்க்கண்டு நடராசா கடந்த கிழக்கு மாகாண ஆட்சியில் மாகாண சபை உறுப்பினராக இருந்த போது வாழ்வாதாரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பொருட்கள் பயனாளிகளிடம் செவ்வாய் கிழமை (21) கையளிக்கப்பட்டன.
மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) பிரதேசத்தைச் சேர்ந்த கடந்த யுத்தத்தினால் பாதிப்புற்று நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த 3 யுவதிகளுக்கு தலா ஒவ்வாரு நவீன முறையிலான தையல் இயந்திரங்களும், வறுமைக்கோட்டுக்குட்பட்ட ஒரு மாணவனின் கற்றறுக்கு துவிச்சக்கர வண்டியும் வழங்கி வைக்கும் நிகழ்வு மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஸ் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கி வைத்துவிட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதில் அவர் மேலும் தெரிவிக்கையில்….
மட்டக்களப்பு மாவட்டம் மதுபோதையிலும், வறுமையிலும் முன்னணியில் இருக்கின்றது. இவற்றை நோக்கும்போது கெட்டவிடையங்களில்தான் நமது மாவட்டம் முன்னணியிலுள்ளது. இவ்வருடம் நான் மட்டக்களப் மாவட்டத்தில் 65 இற்கு மேற்பட்ட பெண்களுக்கு நவீன முறையிலான தையல் இயந்திரங்களை வழங்கியுள்ளேன் எனவே பெண்களின் வாதழ்தாரத்தை மேம்படுத்துகின்றபோதுதான் நமது மாவட்டத்திலுள்ள வறுமையும் குறைந்து கொண்டு செல்லும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு அபிவிருத்திகாக்காகப் போகவில்லை, மாறாக எமது மக்களின் விடுதலைகள், மக்களின் அபிலாசகள் போன்ற வற்றில்தான் நாம் கூடிய பங்களிப்புக்களைச் செலுத்தி வருகின்றோம். இருந்த போதிவும் எமது ஒதுக்கீடுகளில் மக்களின் வாழ்வாதாரங்களுக்கும், ஏனைய செயற்பாடுகளுக்கும் முடிந்தவரை மேற்கொண்டு வருகின்றோம்.
அபிவிருத்தியைவிட எமது உரிமை முக்கியம் என்றுதான் எமது மக்களும் கடந்த காலங்களிலிருந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் அரசியல் சூழ்நிலைகள் மாற்றப்பட்டதன் காரணத்தினால் கடந்த கிழக்கு மாகாண ஆட்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பங்காளியாக இருந்தது என அவர் தெரிவித்தார்.
இதன்போது பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகஸ்த்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment