12 Oct 2017

“முஸ்லிம்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்போம்” கிழக்கில் வாழ்வுரிமைப் பாதுகாப்பு விளக்க பொதுக் கூட்டம்

SHARE
“முஸ்லிம்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்போம்” எனும் தொனிப் பொருளில் வாழ்வுரிமைப் பாதுகாப்பு விளக்க பொதுக் கூட்டம் கிழக்கில்  ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமா அத் பிரிவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி பரவலான சுவரொட்டிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை 13.10.2017 மாலை 4 மணியிலிருந்து இருந்து இரவு 10 மணிவரை ஏறாவூர் புன்னைக்குடா வீதியில் இடம்பெறவுள்ள இந்தப் பொதுக் கூட்டத்தில் கூடவே “தவ்ஹீத் ஜமா அத்தின் சமுதாயப் பணிகள்” பற்றியும் விரிவான விளக்கம் அளிக்கப்படவுள்ளதாகவும் அந்தப் பிரசுரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  



SHARE

Author: verified_user

0 Comments: