12 Oct 2017

கிழக்கு மாகாண பட்டதாரிகளின் நியமனம் வழங்கும் நடவடிக்கையினை துரிதப்படுத்தக் கோரல்

SHARE
கிழக்கு மாகாண பட்டதாரிகளின் நியமனம் வழங்கும்  நடவடிக்கையினை துரிதப்படுத்தக்  கோரி   கிழக்குமாகாண ஆளுனர்  ரோஹிதபோகொல்லாகமவுக்கு கிழக்கு மாகாண முன்னாள் நசீர்அஹமட்  (பொறியியலாளர்) கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார் அந்தக் கடித்திரல் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
   
கிழக்கு மாகாணத்தில் கடந்த  காலங்களில்  நூறு  நாட்களுக்கும் மேலாக  போராட்டங்களை முன்னெடுத்து  போட்டிப் பரீட்சைகளும்  நிறைவடைந்துள்ள நிலையில்   பட்டதாரிகளுக்கான ஆசிரியர்  சேவைக்கான  நியமனங்களை  துரிதமாக வழங்க நடவடிக்கை   எடுக்க வேண்டும் என வினயமாகவேண்டி  இந்தக்  கடித்த்தை  எழுதுகின்றேன்.
எமது  பட்டதாரிகள்  வீதியோரங்களில் போராட்டங்களை  முன்னெடுக்கையில்  அவர்களுக்கான நியமனங்களை பெற்றுக்கொள்வதற்காக  மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின்ஒத்துழைப்புடன் நாம் கெளரவப்  பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது  ஆலோசகர்  ஆர்பாஸ்கரலிங்கம் ஆகியோரை  சந்தித்தோம்இ
அதற்கமைவாக அவர்களின்  ஆலோசனைக்கமைய  எமது பட்டதாரிகள்  தொடர்பான ஆவணங்கள்மற்றும் தரவுகளை  திட்டமிடல்  அமைச்சுக்கு  அனுப்பி அவர்களுக்கான நியமன அனுமதியைப்பெறுவதற்கான நடவடிக்கைகளை  முன்னெடுத்தோம்இ
நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும்  அவர்களுடன் பங்கேற்ற அரச நிகழ்வுகளில்  பகிரங்கமாக தனிப்பட்ட ரீதியிலும் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் வழங்கும் செயன்முறையை  துரிதப்படுத்துமாறு நாம் பல தடவைகள் வலியுறுத்தினோம் 

எமது தொடர்ச்சியான முயற்சியின் பலனாக  எமக்கு முதற்கட்டமாக 1700 பட்டதாரிகளைநியமிப்பதற்கான அனுமதி  கிடைத்த்துஇஅதனடிப்படையில்  எமது  மாகாண  சபையின் பதவிக்காலம்நிறைவடைவதற்குள் அவர்களுக்கான நியமனங்களை வழங்குமாறு  நாம் அதிகாரிகளுக்கு பணிப்புரைவிடுத்தோம்

அதற்கமைவாக  முதற்கட்டமாக  254பேருக்கான   ஆசிரியர் நியமனங்களை  வழங்கியிருந்தோம்

மீதமுள்ள 1446 பேருக்கான நியமனங்களை  துரிதமாக  வழங்குவதற்கான  நடவடிக்கைகளை  முன்னடுத்தபோதும்  எமது  மாகாண சபையின் பதவிக்காலம் நிறைவடைந்த்துஇ
 இதன் காரணமாக எமது  பட்டதாரிகள் தொடர்ந்தும்  நியமனங்களுக்காக காத்திருக்க வேண்டியநிலை ஏற்பட்டுள்ளமை  வேதனைக்குரிய விடயமாகும்இ
எதிர்வரும் காலங்களில்  உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கான வேட்பு மனுகோரப்படுமாயின் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் மேலும்  கால தாமதமாவதற்கு இடமுள்ளதால்  அவர்களுக்கானநியமனங்கள்   வழங்கும் நடவடிக்கையினை   துரிதப்படுத்துமாறு  வேண்டிக்கொள்கின்றேன்இ

இதேவேளை  நாம்  எடுத்த முயற்சியின்  பயனாக பட்டதாரிகளின்  நியமன வயதெல்லையை  45 ஆகமாற்ற முடிந்த்து இஇந்த முயற்சியில்  நீங்கள் அளித்த பங்களிப்புக்கு கிழக்கு மாகாண மக்கள் சார்பில்உங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
எவ்வாறாயினும்  நமது  நியமனப் பொறிமுறை  கால தாமதடைந்த்தன்  காரணமாக ஒரு சிலர் நியமனவயதெல்லையை  கடந்துள்ளனர்

பட்டதாரிகளின் போராட்டங்கள் இடம்பெற்றபோது  வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தம் காரணமாகபட்டப்படிப்பை உரிய வயதில் நிறைவு செய்ய  முடியாமல்  போனோருக்குக்கான  நியமனங்களைவழங்க வேண்டும்  என்பது பிரதான கோரிக்கையாக  அமைந்திருந்த்து.

அதற்கமைவாக மனிதாபிமான  ரீதியானகோரிக்கையாக  அவர்களின் கருத்திற் கொண்டு 45வயதைக்கடந்த  பட்டதாரிகளையும்   நியமனம் வழங்கும் பொறிமுறையில்  உள்வாங்குவதற்கு நீங்கள்நடவடிக்கை  எடுப்பீர்கள் என நம்புகின்றோம்.

எனவே  கிழக்கு மாகாண பட்டதாரிகளின் வேதனைகள் மற்றும் அவர்கள் முன்னெடுத்தபோராட்டங்கள் குறித்து நீங்கள் ஊடகங்கள் வாயிலாக இதற்கு முன்னர்  அறிந்திருப்பீர்கள்


ஆகவே  அவர்களின் துயர்களையும் வேதனைகளையும் கருத்திற் கொண்டு  அவர்களுக்கு  நியமனம் வழங்கும் நடவடிக்கையினை  விரைவில்  முன்னெடுப்பீர்கள் என நம்புகின்றேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: