நியாயமான கோரிக்கைகளை முன் வைத்து கடந்த 20 நாட்களாக போராட்டம் நடாத்தி வரும் தம்மீது மின்வெட்டு மற்றும் நீர்வெட்டு என்பனவற்றை பல்கலைக் கழக நிருவாகம் மேற்கொண்டுள்ளது.
என்ன வகையான இடைஞ்சல்கள் ஏற்படுத்தப்பட்டாலும் தமது போராட்டத்தை இடைநடுவில் கைவிட்டு தோல்வியோடு ஓடி ஒழிந்து கொள்ள மாட்டோம் வெற்றி காணும் வரை ஓயாது போராடுவோம் என போராட்டம் நடாத்தி வரும் மாணவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.
கிழக்குப் பல்கலைக்கழக நிருவாக மற்றும் பேரவைக் கட்டிடத்தை ஆக்கிரமித்து தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடாத்தி வரும் மாணவர்களை அங்கிருந்த வெளியேறுமாறு கோரி நீதிமன்றம் மற்றும் பல்கலைக்கழக கவுன்ஸில் ஆகியவை விடுத்த உத்தரவையும் மீறி அப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் வந்தாறுமூலை வளாகத்தில் 20வது நாளாக செவ்வாய்க்கிழமையும் (29.08.2017) தொடர்ந்து இடம்பெற்றது.
தமது சக மாணவர்கள் மீதான முறையற்ற வகுப்புத்தடைகளை நீக்குமாறும், பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ள 2ம் வருட மாணவர்களுக்கான விடுதி வசதிகளைப் பெற்றுத் தருமாறும் அசிரத்தையாக உள்ள பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்தும், தமது பிரதான தேவைகள் மற்றும் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தாம் பேரவைக் ளுநயெவந கட்டிடத்தினுள் தங்கியிருந்து வருவதாக மாணவர்கள் தெரிவிக்கிறார்கள்
இதேவேளை, மாணவர்கள் ஆக்கிரமித்துள்ள குறித்த கட்டிடத்திற்கான மின்சாரம் மற்றும் நீர் விநியோகம் என்பன கடந்த சில நாட்களாக பல்கலைக்கழக நிருவாகத்தால் தடைப்படுத்தப்பட்டுள்ளதால் மாணவர்கள் மின்பிறப்பாக்கி மூலம் மின்னொளியையும், அங்குள்ள கிணறுகளைத் துப்பரவு செய்து கைகளால் நீரை அள்ளிவந்து தமது நீர்த் தேவையையும் பூர்த்தி செய்து கொள்வதாகத் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, நீர் வெட்டினால் அவஸ்தைப்படும் பல்கலைக் கழகத்தில் வளர்க்கப்படும் மாடுகளுக்கும் தாம் தாகம் தீர்த்து வருவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இரவு பகலாக தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காகவும் பொழுதுபோக்கிற்காகவும் தினமும் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து மாணவர்களுக்கு களிப்பூட்டி, கௌரவித்து, பரிசளித்து, பாராட்டி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை ஊர் ஊராகச் சென்று தமது போராட்டத்தை நியாயப்படுத்தும் பிரச்சாரங்களையும் மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
இந்த பிரச்சாரத்தின்போது “நிருவாகிகளே மாணவ பிரச்சினைகளைத் தீர்த்து உடனடியாகப் பல்கலைக் கழகத்தைத் துவங்கவும்” எனும் பிரசுரத்தையும் மட்டக்களப்பு நகரெங்கும் ஒட்டி வருகின்றனர்.
0 Comments:
Post a Comment