மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களுக்கு புதிய உதவிப்
பணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் அறிவித்துள்ளது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளராக ஆலிதீன் ஹமீர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கெனவே தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளராக கடமை புரிந்தவராகும்.
இதேவேளை, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளராக எம்.எல்.எம்.என். நைறூஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கெனவே மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளராக பணியாற்றியவராகும்.
இவர்கள் திங்களன்று (02.01.2017) குறிப்பிட்ட மாவட்ட அலுவலகங்களில் தமது கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டனர்.
0 Comments:
Post a Comment