(டிலா )
மருதமுனை சைல்ட் பெஸ்ட் (Child First ) ஆங்கிலக் கல்லூரியின் வருடாந்த கலை கலாசார மற்றும் பரிசளிப்பு நிகழ்வு என்பன அல்-மனார் மத்திய கல்லூரியில் சைல்ட்
பெஸ்ட் கல்லூரியின் தலைவரும் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் ஆங்கில மொழிப் பிரிவின் தலைவருமான சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.ஏ.எம்.எம்.நவாஸ் தலைமையில் (02.12.2014) நடைபெற்றது.
நிகழ்வில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எப்.ரஹ்மான், சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் டாக்டர் சித்தீக் ஜெமீல், கல்முனை கபீப் வங்கி முகாமையாளர் ஏ.எல்.அன்வர்டீன், தெ. கி.பல்கலைக்கழக பொறியியல் பீடாதிபதி எஸ்.எம்.ஜூனைத்தின், முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம்.ஜெமீல் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment