6 Dec 2016

புற்று நோய் தொடர்பான விசேட கருத்தரங்கு

SHARE

(துறையூர் தாஸன்)

புற்றுநோய் தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக, விசேடகருத்தரங்கு புதன் கிழமை 10.30 மணிக்கு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில், வைத்தியஅத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையின் விசேட புற்றுநோயியல் வைத்தியநிபுணர் டாக்டர்.டப்ளியு,டி.ஐ.சாமாகுணதிலக்கவினால் இக் கருத்தரங்கு நடாத்தப்படவுள்ளது. 

வைத்தியசாலையில் கிளினிக் சிகிச்சைபெறும் நோயாளர்கள் மற்றும் ஆர்வமுடைய பொதுமக்கள் அனைவரையும் தவறாது கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்வதுடன் 200 பேருக்கு மாத்திரம் இக்கருத்தரங்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் ,தங்கள் பெயர் விபரங்களை உடனடியாக  ; கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையின் வரவேற்பு பிரிவில் பதிவு செய்துகொள்ளுமாறு வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: