கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராசசிங்கம் அவர்களின் மாகாணசபை நிதி ஒதுக்கீட்டின் மூலம் தனிப்பட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று அமைச்சரின்
மட்டக்களப்பு அலுவலகத்தில் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தங்கவேல் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் கலந்து கொண்டதுடன் அலுவலக உத்தியேகஸ்தர்கள் பொருட்கள் பெறுவோர் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது அமைச்சரின் கிழக்கு மாகாணசபை நிதி ஒதுக்கீட்டின் மூலம் புளியந்தீவு ரிதம் இளைஞர் கழகத்திற்கு 50000 ரூபா பெறுமதியில் ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment