26 Nov 2016

கிழக்கு மாகாண சிவில் சமூகத்திற்கு அச்சுறுத்தலுள்ளது. உண்மை, நீதி, மற்றும் நல்லிணக்கத்திற்கான அரங்கத்தின் தலைவர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ்

SHARE
கிழக்கு மாகாண சிவில் சமூகம் தற்சமயம் பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக கிழக்கு மாகாண உண்மை, நீதி, மற்றும் நல்லிணக்கத்திற்கான அரங்கத்தின் கிழக்கு மாகாணத் தலைவர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ் தெரிவித்தார்.
இது தொடர்பாக புதன்கிழமை (23.11.2016) கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது@ அதிகார அழுத்தங்கள் இருப்பதாக மக்கள் அச்சப்படும் சூழ்நிலையில் சட்டத்தில் என்ன வகையான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன என்பது பற்றி எதுவும் தெரியாதவர்களாக மக்கள் இருக்கின்றார்கள்.

சிவில் நிருவாகத்தை அமுல்படுத்தக் கூடிய பொறுப்புள்ள அலுவலர்களான பொலிஸாரின் நடவடிக்கைகள் நடுநிலையானதாக இல்லை. அது பாரபட்சமும் பக்கம் சார்பானதாகவும் காணப்படுகின்றது.

இதனையிட்டு மக்கள் மேலும் அச்சமடைந்துள்ளார்கள்.

இதனால் கிழக்கு மாகாணத்தில் பரவலாக அச்சம் ஏற்பட்டுள்தோடு புதிய முரண்பாடுகளும் தோன்றுவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
பொலிஸ் விசாரணையின் போதும் கூட அதிகார அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

பொலிஸ் உயரதிகாளைச் சந்திக்கக் கூடிய செலவாக்குடையவர்களுக்கு மாத்திரம் பொலிஸாரின் சிநேகமான நட்புறவு கிடைப்பதாகவும் சிவில் சமூகம் கருதுகிறது.

மாற்றுக்  கருத்துக்களை மௌனிக்கச் செய்ய வேண்டும் என்பதில் அதிகாரிகள் அக்கறையாக இருப்பதாகவும் இது மீண்டும் யுத்த காலத்தைப் போன்று  அச்சுறுத்தலான செயற்பாடுகளுக்கு வழிவகுக்கின்றதா என்றும் ஐயப்படக் கூடியதாக இருக்கின்றது.

ஒட்டு மொத்தத்தில் சமகால நாட்டு நடப்புக்களையிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலே செயற்படும் சிவில் அமைப்புக்கள் குழம்பிப் போய் இருக்கின்றன. ஆனாலும், எத்தகைய சூழ்நிலையிலும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு ஒருபோதும்  தாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதில் சிவில் அமைப்புக்கள் திடசங்கற்பம் கொண்டுள்ளார்கள்.

அரசாங்க, அல்லது ஆளுந்தரப்பின் ஏகாதிபத்திய அரசியல் நலன்சார்ந்த அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை என்பதிலும் சிவில் சமூகம் கரிசனை கொண்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: