மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள செங்கலடி எல்லை நகரில் சனிக்கிழமை பிற்பகல் (ஒக்ரோபெர் 08, 2016) கைக்குண்டொன்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எல்லை நகரிலுள்ள கிருஷ்ணப்பிள்ளை சுந்தரமூர்த்தி என்பவரின் வளவிலேயே இந்தக் குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வீட்டுரிமையாளர் தனது வளவைத் துப்பரவு செய்து கொண்டிருந்த போது இந்தக் குண்டு மண் குழியொன்றுக்கருகில் தென்பட்டவுடன் அது குறித்து அவர் புலனாய்வாளர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த புலனாய்வாளர்களும் பொலிஸாரும் குண்டை மீட்டு அதனைச் செயலிழக்கச் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது யுத்தம் இடம்பெற்ற காலத்தில் புழக்கத்தில் இருந்த கையெறி குண்டு வகையைச் சேர்ந்தது என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
0 Comments:
Post a Comment