காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று தம்புள்ளை-கலேவெல பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (07.08.2016) அதிகாலை 2 மணியளவில் விபத்துக்குள்ளானதில் அதில்
பயணித்த சிலர் சிறுகாயங்களுக்குள்ளாகியதாகவும் வேன் சேதமடைந்துள்ளதாகவும் கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வேன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற வாகனம் ஒன்றின் மீது மோதியே விபத்து சம்பவித்துள்ளது.
வேனில் பயணித்த அனைவரும் பிறிதொரு வாகனத்தின் மூலம் தமது பயணத்தைத் தொடர்ந்ததாகத் தெரிவித்த கலேவெல போக்கு வரத்துப் பொலிஸார் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறினர்.
இதனிடையே, காத்தான்குடியிலிருந்து கொழும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த காத்தான்குடி சாலைக்குச் சொந்தமான பயணிகள் பஸ்ஸொன்று சனிக்கிழமை அதிகாலை கலேவெல பகுதியில் மின்கம்பம், மற்றும் சுவருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் பஸ்ஸ{ம் சேதமடைந்து பயணிகள் சிலரும் சிறு காயங்களுக்குள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment