28 Aug 2016

சட்டவிரோதமாகக் கடத்திவரப்பட்ட 10 மாடுகளுடன் இருவர் கைது

SHARE
சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட 10 மாடுகளுடன் சனிக் கிழமை (ஒகஸ்ட் 27, 2016) மாலை  
வந்தாறுமூலையில் வைத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக மாடுகள் கடத்திவரப்படுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலை அடுத்து பொலிஸ் அணியினர் மறைந்திருந்து திடீர் சோதனை மேற்கொண்டபோது  இந்த மாடுகள் கைப்பற்றப்பட்டதோடு அவற்றை கடத்தி வந்தவர்களும் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் இந்த மாடுகளை இறைச்சிக்காக அறுக்கும் நோக்குடன் திகிலிவெட்டை எனும் கிராமத்திலிருந்து அனுமதிப் பத்திரமின்றி கடத்தி வந்துள்ளனர் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது தெரியவந்திருப்பதாக தெரிவித்த பொலிஸார் சந்தேக நபர்கள் மீது சட்டவிரோதமாக மாடுகள் கடத்தலில் ஈடுபட்டதற்காக நடவடிக்கை எடுக்கவிருப்பதாகத் தெரிவித்தனர்.
கைதான இருவரும் முறையே 20, மற்றும் 21 வயதுடைய ஏறாவூர், மற்றும் திகிலிவெட்டைக்  கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன



SHARE

Author: verified_user

0 Comments: