13 Jul 2016

சிறப்பாக நடைபெற்ற, "புளொட்" சுவிஸ் கிளையின் வீரமக்கள் தினம்..

SHARE
புளொட்டின் சுவிஸ் கிளை சார்பில் 27ஆவது வீரமக்கள் தினம் சுவிஸின் சூரிச் மாநகரில் கடந்த 10.07.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று, மதியம் 01.00 மணி முதல் மாலை 07.00 மணிவரை சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில், கழகதோழர்கள், ஆதரவாளர்கள், ரெலோ, .பி.ஆர்.எல்.எப் பிரதிநிதிகள் ஆகியோருடன் பெரியோர்கள், குழந்தைகளென பொதுமக்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்

ஆரம்ப நிகழ்வாக, மங்கள விளக்கேற்றலை தோழர்கள் மனோ, சித்தா, கைலாசநாதன் (குழந்தை), ஜெர்மன் கிளைத் தோழர் யூட், திருமதி.சுகந்தினி இரதீஸ்வரன் (தீபன்), திருமதி.சந்திரா அரிராஜசிங்கம், திரு.ரத்னகுமார் ஆகியோர் ஏற்றிவைக்க, இதனைத் தொடந்து மேடையில் வைக்கப்பட்டு இருந்த அனைத்து அமைப்புக்களின் தலைவர்கள், போராளிகளின் உருவப் படங்களுக்கு , கூட்டத்தில் கலந்து கொண்டு இருந்த, அனைவராலும் மலரஞ்சலி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தோழர் ரஞ்சன் அவர்களினால் ஒருநிமிட மௌன அஞ்சலியுடன் விழா ஆரம்பித்து வைக்கப்பட, விழாவினை திருமதி. ஜெயவாணி குகராஜாசர்மா அவர்கள் மிக சிறப்பாக தொகுத்து வழங்கினார்.    

விழாவின் ஆரம்பத்தில் வினோத உடைப் போட்டி, நடைபெற்று அதனை தொடர்ந்து, நடன, நாட்டிய நிகழ்வுகள், சிறு பிள்ளைகளின் "தாளலயம்", சிறுவர் பாட்டு, விருந்தினர்கள் உரை, நன்றியுரை, ஆகியவற்றுடன் தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்ட பரீட்சைப் போட்டியில் வெற்றியீட்டிய மற்றும் பங்குபற்றிய, அனைத்து மாணவ, மாணவிகளுக்குமான பரிசில்கள் வழங்குதலும் நடைபெற்றது.

விருந்தினர்கள் உரையில் திரு.விவேகானந்தன் ஆசிரியர், திரு.செல்வராஜா ஆசிரியர், திரு.சிவஞான பண்டிதர் மகேந்திரன், சுவிஸ் சூரிச் தமிழர் கலாசார மன்றம் சார்பாக திரு. இரத்னகுமார், ஈழ மக்கள் புரடசிகர விடுதலை முன்னணி (.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணி) சார்பாக தோழர் சுதாகரன், "புளொட்" அமைப்பின் சார்பாக தோழர் ரஞ்சன் ஆகியோர் உரையாற்றி இருந்தனர்.  

நன்றியுரையினை தோழர் சிவா வழங்கி இருந்தார். இவர் தனது உரையில், "பல நடன நிகழ்சசிகளை தனது மாணவிகள் மூலம் வழங்கி இருந்ததுடன் நிகழ்வையும் சிறப்பாக தொகுத்து வழங்கிய திருமதி ஜெயவாணி குகராஜாசர்மா, "தாளலயம்" உட்பட சிறுவர் பாடல் போன்ற நிகழ்வுகளை தயாரித்து வழங்கி இருந்த திருமதி.வதனாம்பாள் புஷ்பானந்தசர்மா, மற்றும் இன்றைய நிகழ்வுக்கு பல வழிகளிலும் உதவிபுரிந்த திருமதி. கருணாகரன் தவச்செல்வி, திருமதி. சந்திரா அரிராஜசிங்கம், திருமதி. வர்ணகுமாரன் நேசராணி, திரு.ஜெகநாதன், ஆகியோருக்கும்.. 

மண்டப ஒலியமைப்பை சிறப்புடன் வழங்கி இருந்த திரு.குமார் மற்றும் அவரது நண்பருக்கும், மண்டப அலங்காரத்தை வழங்கி இருந்த திரு.நவம் அவர்களுக்கும், மற்றும் பரீட்சை போட்டியின் போது உதவி புரிந்த அனைவருக்கும் உட்பட மற்றும் பலவழிகளிலும் உதவி புரிந்த "பெயர் குறிப்பிட்ட, குறிப்பிட மறந்த" அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்


நன்றி அறிவித்தலைத் தொடர்ந்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. மேற்படி பரிசில்களை வயதில் மூத்தோர், விருந்தினர்கள், உதவிகள் புரிந்தோர், கழகதோழர்கள் ஆகியோரினால் நிகழ்வுகளை தந்தோர்கள், உதவிகள் புரிந்தோருக்கான பரிசில்களும், மாணவ மாணவிகளுக்குமான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தது.   













SHARE

Author: verified_user

0 Comments: