22 Jul 2016

மண்முனை வடக்கு மற்றும் காத்தான்குடி பகுதிகளுக்கு 4 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் கையளிப்பு

SHARE
ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மண்முனை வடக்கு மற்றும் காத்தான்குடி பகுதிகளுக்கு
4 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் கையளிப்பு

தனது 2016 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடி மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரவுட்குட்பட்ட சங்கங்கள், பொது நிறுவனங்கள், கழகங்கள், மதஸ்தலங்களுக்கு தேவையான 4 மில்லியன் ரூபா பொறுமதியான உபகரணங்கள் வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டன.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு ஆகிய பிரதேச செயலாளர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்,  இணைப்புச் செயலளார் றுஸ்வின் முஹம்மத் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.





SHARE

Author: verified_user

0 Comments: