அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிலுள்ள மல்வத்தை மல்லிகைத்தீவு வீதியில் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆற்று மணல் ஏற்றிச் சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்துச் சம்பவித்தள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சம்மாந்துறை செந்நெல் கிராமத்தைச் சேர்ந்த முஹம்மத் றிஸ்வான் (வயது 27) என்பவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார்.
அவருடன் பயணித்த அதே கிராமத்தைச் சேர்ந்த எம். மனாஸ் (வயது 25) என்பவர் படுகாயங்களோடு சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து அம்பாறை பொது வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, டிப்பர் வாகன சாரதியான எம்.அஸாம் என்பவர் காயங்களுக்குள்ளான நிலையில் சம்மாந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment