(அஷ்ரப் ஏ சமத்)
வவுனியாகல்வியற்க் கல்லூரியைஅரசாங்கம் வடக்கின் ஆசிரிய பல்கழைக்கழக மாகமாற்று வதற்கு அகதி முகாம்கள் தடையாக உள்ளதாக கல்லூரியின் பீடாதிபதி கே..சிதம்பரநாதன் தெரிவித்தார்.கடந்த 19 ஆண்டுகளாக இந்தக் கல்விக் கல்லூரியில் 6 ஏக்கர் நிலத்திலும் எங்களது விடுதிக் கட்டடங்களிலும் இந்த மக்கள் வாழ்வதனால் அரசாங்கம் மேற்கொள்ளும் பாரியகல்வி அபிவிருத்தி வீணடிக்கப் படுகின்றது.
கல்வியமைச்சின் புதிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப நாடு முழுவதிலும் 25 கல்விக் கல்லூரிகளை ஆசிரிய பல்கலைக்கழக கல்லூரியாக 2015ஆம் ஆண்டின் மாற்று வதற்கு கல்வி அமைச்சு தீர்மாணம் எடுத்துள்ளது. வருடா வருடம் இக் கல்லூரி 500 ஆசிரியர்களை உருவாக்கி வருகின்றது.
இம் மாவட்டத்தில் உளள ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் ஆசிரியர்களை பட்டப்படிப்பினை போதித்து அக் கல்வி மூலம் நவீன முறையில் எதிர்காலத்தில் சிறந்த கல்விச் சமுகத்தினை உருவாக்குவதற்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. எனவும பீடாதிபதி தெரிவித்தார்.
இங்கு நேரடியாக விஜயம் செய்து அம் மக்களையும் அவர்கள் வாழும் பிரதேசத்தினை அவதாணித்தபோது -
இங்கு அகதிகளின் நலன்புரித் தலைவர் கே. வேலாயுதம் (வயது 69) தெரிவிக்கையில் ; - கிளிநொச்சியில் 1990 ஆம் ஆண்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக அகதிளை அரசாங்கமே எங்களை இங்கு அழைத்து வந்து குடியமர்த்தினார்கள். என ; வயது தெரிவித்தார்.
நாங்கள் 83 களில் இலங்கையில் ஏற்பட்ட இனப்பிரச்சினையினால் மலையகப் பகுதிகளில் இருந்து கிளிநொச்சியில் வந்து இடம் பெயர்ந்து வாழ்ந்து வந்தோம்.கிளிநொச்சியில் கடந்த 4 தசாப்தங்களாக 3 பரம்பரையினர்கள்
வடக்கிலேயே பிறந்து இங்கு திருமணமுடிந்துபல குடும்பங்களாக பெருகி வாழ்ந்து வருவதாகவும் ; தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சியில் ஏற்பட்ட யுத்தம் காரணமாகவே இங்கு அகதிகாளக வந்தோம். ஏற்கனவே 89 குடும்பங்கள் இந்தப் பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். அதில் 18 குடும்பங்கள் இந்தக் கல்விக் கல்லூரியின் கட்டிடத்திற்குள் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.
நாங்கள் இந்த அகதி முகாமில் தற்பொழுது “10 சதுர அடிநிலப்பரப்பில் எவ்விதஅடிப்படை வசதிகளுமின்றி தற்காலிக கொட்டில்களில் வாழ்ந்துவருகிறோம். ஏனவேலாயுதம் தெரிவித்தார்.
அரசாங்கத்திடமிருந்து எங்களுக்கு கடந்த 10 வருட காலமாக எவ்வித உதவிகளோ நிவாரணங்களோ தங்களுக்கு கிடைப்ப தில்லை.
இவ்விடயம் சம்பந்தமாக காலத்திற்குகாலம் அரசியல் வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடமும் எங்களது பிரச்சினைகளை தெரிவித்து வருகின்றோம். ஆனால் இதுவரை எங்களுக்கு எவ்வித நடவடிக்களையும் எடுத்ததாக தெரியவில்லை. தாங்கள் கடந்த 19 வருடங்களாக வாழ்ந்துபழகி விட்டோம்.
இந்நலம்புரிச் சங்கத்தின் செயலாளர் ரூபன் தெரிவிக்கையில்...
நான் ஆறு வயதில் எனதுதாய் தந்தையருடன் இந்த அகதி முகாமுக்கு வந்தேன். தனக்குதற்போது 25 வயது. இந்த அகதி முகாமில் வாழ்நத பெண்ணை திருமணம் முடித்துதனக்கு 3 குழந்தைகள் உள்ளன. அவர்கள் இந்தமுகாமில் வாழ்கிறார்கள். கல்வியற்க் கல்லூரிக்கு அருகாமையில் அரசகாணிஉள்ளது. அதில் மீளக்குடியமர்த்துமாறும் வேண்டுகின்றோம். இவ்விடத்திலேயே எங்களது தொழில பிள்ளைகளின் பாடசாலைகல் விவசதி உள்ளது எனதெரிவித்தார்.
இவ்விடயம் சம்பந்தமாக வவுனியா பிரதேச செயலாளர் உதயராசா தொடர்பு கொண்டு கேட்டபோது.....
இந்த மக்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி முன்னேற்றுவது அரசாங்கத்தின் நோக்கமாகும். வவுனியா வடக்கு அரசகாணியில் லண்டனில் உள்ள ஞாணம் எனும் அரசசார்பற்ற நிறுவனம் வீடுகளை நிர்மணிக்க ஒன்று முன்வந்துள்ளது. தற்பொழுது 80 வீதமான நிர்மாண வேலைகள் அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அந்நிறு வனத்தினால் அப்பிரதேச குளம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு ஏக்கர் காணியும்; சகல அடிப்படை வசதிகளையும் கொண்டவீடுகள், மற்றும் பாடசாலை ஆகியனவும் தற்போ நிர்மணிக்கப்பட்டு வாழ்வாதாரத்திற்கான வசதிகளும் செய்து கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்....
இவ்வேலைத் திட்டம் வவுனியாவடக்குபிரதேசசெயலாளரின் மேற்பார்வையின்தற்பொழுதுகீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன. அப்பிரதேசத்திலுள்ளஅபிவிருத்திசெய்யப்பட்டுமீளக்குடியமர்த்தப்பட்டுஅபிவிருத்திசெய்யப்படவுள்ளன.
இருந்தும் இம்மக்கள் பழைய வாழ்கை நிலையிலேயே வாழ்வதற்குகுறுகிய நோக்கம் கொண்ட சிலரே இம் மக்களை குழப்பி அங்கேயே நிரந்தரமாக தங்கவைப்பதற்கு முயற்சிக்கின்றனர்.
இம்மக்களை மீளக்குடியமர்த்தினால் வவுனியா மாவட்டத்திலே இந்தக் கல்விக் கல்லூரி பல்கலைக் கழககல்லூரியாக மாறி இந்த மாவட்டத்தில் பின் தங்கிய பாடசாலைகளது ஆசிரியர்களை உருவாக்குவதற்கு ஏதுவாகஅமையும். ஒருமாவட்டத்தின் கல்விக்கு இக் கல்லூரியில் வளவிலும் கட்டிடங்களிலும் தங்கியிருக்கும் மக்களால் கல்வி அபிவிருத்திக்க தடையாக உள்ளதகாவும் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment