கிழக்கு மாகாணத்தின் கல்முனை பகுதியில் அநாதரவான நிலையில் நடமாடிக்கொண்டிருந்த வேளை பொலிஸாரால் மீட்கப்பட்ட சிறுமியை சுனாமியின்போது காணாமல் போன தங்களது குழந்தை என இரு குடும்பங்கள் சட்ட ரீதியாக உரிமை கோரியுள்ளன.
கல்முனையை சேர்ந்த தமிழ் குடும்பமொன்றும் அம்பாந்தோட்டையை சேர்ந்த முஸ்லிம் குடும்பமொன்றும் தனித்தனியாக உரிமை கோரும் மனுக்களை வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
24ஆம் திகதி அறிக்கையை சமர்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் கல்முனை பொலிஸாரால் மீட்கப்பட்ட இந்த சிறுமி நீதிமன்ற உத்தரவின் பேரில் தற்போது அம்பாறையிலுள்ள சிறுவர் பாதுகாப்பு மையமொன்றில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சிறுமி அறநெறி பாடசாலைக்கு சென்றிருந்த வேளை சுனாமியின் பின்னர் காணாமல் போயிருந்ததாக தமிழ் குடும்பம் கூறும் அதேவேளை, சுனாமியின் போது மூன்று வயதான குழந்தையாக இருந்தபோது தந்தையின் கையிலிருந்து தவறிப் போன குழந்தையே இந்த சிறுமி என முஸ்லிம் குடும்பம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment