உலகில் திரும்பக் கிடைக்காத ஒரே சிம்மாசனம் தாயின் மடிதான் என்பதை
அறிந்தவர்கள் நீங்கள்! இந்த வருடம் பிறக்கும் போது சூரியனும், புதனும் லாப
வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் பூர்வீகச் சொத்தில் மாற்றம்
செய்வீர்கள். பிள்ளைகள் தங்களது தவறை உணருவார்கள். மகனுக்கு எதிர்பார்த்த
நிறுவனத்தில் வேலை கிடைக்கும். நல்ல இடத்தில் மணப்பெண்ணும் அமையும். மனைவி
உங்களுடைய புது முயற்சிகளை ஆதரிப்பார். உறவினர், நண்பர்களின் வருகையால்
வீடு களைகட்டும். இந்த வருடம் முழுக்க உங்கள் ராசிநாதன் சனி பகவான் 10-ம்
வீட்டிலேயே தொடர்வதால் உங்களின் முதிர்ச்சியான பேச்சில் அறிவு வெளிப்படும்.
அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். வழக்கில் வெற்றி
பெறுவீர்கள். இயக்கம், சங்கம் இவற்றில் புதுப் பதவிக்குத்
தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.
மகான்கள், சித்தர்களின் ஜீவசமாதிக்குச் சென்று வருவீர்கள். கடந்த கால
சுகமான அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். புத்தாண்டின் தொடக்கம்
முதல் 07.02.2016 வரை அதிசாரத்தில் மற்றும் 02.08.2016 முதல் வருடம்
முடியும் வரை குரு 8-ம் வீட்டில் மறைந்திருப்பதால் உங்களைச்
சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். சில இடங்களில் சில நேரங்களில்
ஆழமான உறவுகளைவிடப் பணத்திற்குத்தான் மரியாதை கிடைக்கிறது என்ற உண்மையைக்
கண்கூடாகப் பார்ப்பீர்கள். சில சமயங்களில் தனிமைப்படுத்தப்பட்டதைப் போல்
உணர்வீர்கள். ஆனால் 08.02.2016 முதல் 01.08.2016 வரை 7-ம் வீட்டில்
அமர்ந்து குரு, உங்கள் ராசியை நேருக்கு நேர் பார்ப்பதால் சுருங்கியிருந்த
முகம் மலரும். தோற்றப் பொலிவு கூடும். குடும்பத்தில் சில முக்கிய
பொறுப்புகள் உங்கள் கைக்கு மாறும்.
08.01.2016 முதல் வருடம் முடிய உங்கள் ராசிக்குள் கேதுவும், 7-ம் வீட்டில்
ராகுவும் அமர்வதால் முன்கோபம் அதிகமாகும். நேரம் கிடைக்கும்போது யோகா,
தியானம் செய்யத் தவறாதீர்கள். குடும்பத்திலும் விட்டுக் கொடுத்துப்போவது
நல்லது. திடீரென்று அறிமுகமாகி உங்களை அதிகம் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும்
புது நண்பர்களை நம்பிப் பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். கணவன்
மனைவிக்குள் பிரிவுகள் வரக்கூடும். 27.02.2016 முதல் 9.09.2016 வரை உங்கள்
ராசிநாதன் சனியுடன் செவ்வாய் சேர்வதால் அலர்ஜி, நோய்த் தொற்று, ஆரோக்கியக்
குறைவு வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் கொஞ்சம்
முரண்டுபிடிக்கத்தான் செய்வார்கள். பங்குதாரர்களால் விரயங்கள் ஏற்படும்.
உத்யோகத்தில் வேலைச் சுமை அதிகரித்தாலும் புதிய அனுபவங்களைக்
கற்றுக்கொள்வீர்கள். சக ஊழியர்களில் ஒரு சிலர் இரட்டை வேடம் போடுவதையும்
நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். தானுண்டு, தன் வேலையுண்டு என்றிருக்க
வேண்டிய வருடமிது.
0 Comments:
Post a Comment