2 Jan 2016

மீனவர்களுக்கு விளக்கமறியல்

SHARE

அனுமதியின்றி திருகோணமலை கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 29 பேரையும் எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரி.சரவணராசா வெள்ளிக்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 

கடந்த புதன்கிழமை (30) குறித்த இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

இதனையடுத்து இவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
SHARE

Author: verified_user

0 Comments: