நாட்டின் வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுகிறது எனவும் அத்துடன் இன்று (01) தென்மேல் பருவமாற்றம் அனைத்துப் பகுதிகளிலும் தொடரும், எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், மத்திய மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் வடமேல் மாகாணங்களில் மழைக்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகிறது எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கிழக்கு ஊவா மாகாணங்களில் பிற்பகல் 04 மணி முதல் 08 மணி வரையில் இடியுடன் கூடிய மழை காணப்படலாம் எனவும் வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. தென்மேல் பருவக்காற்றின் வேகம் அதிகரிக்கலாம் எனவும் இடியுடன் கூடிய நேரத்தில் மின்னல் அபாயங்களும் ஏற்படக்கூடுமெனவும் அதனால் பொதுமக்கள் அனைவரையும் மிகவும் அவதானத்துடன் இருக்கும் படி வானிலை அவதான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.பருவ நிலை மாற்றத்தினால் சூரியனின் வெப்பம் சில பிரதேசங்களில் அதிகளவாக காணப்படலாம். அவ்வகையில் இன்று முதலாம் திகதி தெமட்டவேவா, சேருவாவில, சிப்புக்குளம் ஆகிய பிரதேசங்களில் மதியத்தில் சூரியனின் உச்சம் அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதான நகரங்களின் காலநிலை
நாட்டின் வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இரவில் அதிகளவிலான இடி முழக்கங்கள் ஏற்படக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பிரதேசங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழைக்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகிறது.
அநுராதபுர மாவட்டத்தில் வெப்ப நிலையானது ஆகக்கூடியது 34 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 25 செல்சியஸ் பாகையாகவும் காணப்படுவதோடு மிதமான காலநிலை காணப்படலாம். யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆகக்கூடியது 33 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 27 செல்சியஸ் பாகையாகவும் காணப்படும் அதேவேளை யாழ்ப்பாணம் மன்னார் ஆகிய பிரதேசங்களிலும் மிதமான காலநிலை காணப்படும்.
மட்டக்களப்பில் ஆகக்கூடுதலான வெப்பநிலையாக 34 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 26 செல்சியஸ் பாகையாகவும் காணப்படும் அதேவேளை சிறிதளவிலான மழைக்கு சாத்தியம் காணப்படும். கொழும்பு மாவட்டத்தில் ஆகக்கூடுதலான வெப்பநிலை 30 செல்சியஸ் பாகையாகவும் ஆகக் குறைவான வெப்பநிலை 26 செல்சியஸ் பாகையாகவும் காணப்படுவதோடு சிறிதளவிலான மழைக்கான காலநிலை காணப்படலாம்.
கண்டி நுவரெலியா இரத்தினபுரி கொழும்பு காலி மாவட்டங்களில் சிறிதளவிலான மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் ஆகக்கூடிய வெப்பநிலையாக திருகோணமலை மாவட்டத்தில் 37.4 செல்சியஸ் பாகையும் குறைந்தளவு வெப்பநிலையாக நுவரெலியா மாவட்டத்தில் 13.4 செல்சியஸ் பாகையும் காணப்படுகிறது.
ஆகக்கூடியளவு மழைவீழ்ச்சி பதிவாகிய பிரதேசம்
நாட்டில் ஆகக்கூடியளவு மழைவீழ்ச்சியாக இரத்தினபுரி பிரதேசத்தில் 61.4 மில்லி மீற்றர் பதியப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment