மட்டக்களப்பு மாவட்டம், பட்டிப்பளைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப் பட்டு வரும் 94 ஏக்கர் சதுப்பு நிலப்பரைப்பபை அரசியல்வாதிக்ககு குத்தகைக்கு வழங்க வேண்டாம் எனக்கோரி புதன் கிழமை (17) மகிழடித்தீவு சந்தியிலிருந்து பட்டிப்பளை பிரதேச செயலகம் வரை அப்பகுதி வாழ் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வார்ப்பாட்டத்தில் மகிழடித்தீவு, முதலைக்குடா, முனைக்காடு, தாளையடித்தெரு, ஆகிய கிராம மக்கள் கலந்து கொண்டிருந்ததோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பட்டிப்பளை பிரதேச செயலகம் வரைச் சென்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி, மற்றும் இதில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் சுற்றாடல் அதிகார சபையினருக்கும் மகஜர் ஒன்றையும், சமர்ப்பித்தனர்.
ஆரச அதிபரே அனுமதியை நிறுத்து, எங்கள் நிலத்தை சுரண்ட எவருக்கும் அனுமதியோம், பிரதேச செயலாளரே பிளைகளுக்கு துணைபேகாதே, இயற்கை எங்கள் சொத்து அதைப் பாதுகாப்போம், இறாலை வளர்த்து விளை நிலத்தை உவராக்காதே, சிறு மீன் பிடியாளர்களைப் பாதுகாப்போம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்க்ள ஏந்தியிருந்தனர்.
0 Comments:
Post a Comment