மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டியிலிருந்து ஏறாவூர் நோக்கி
மாவடிவேம்பு பிரதான வீதி ஊடாக சென்று கொண்டிருந்த வாகனமொன்று
மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று புதன்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மின்கம்பம் உடைந்து வாகனத்தின் மீது விழுந்ததில், ஏறாவூர் ஐந்தாம் குறிச்சியை சேர்ந்த எஸ்.மோகநாதன் (வயது 60) என்பவர் காயங்களுக்குள்ளாகி செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
0 Comments:
Post a Comment