8 Jan 2015

உணர்வு பூர்வமான வாக்களிப்பு…

SHARE
நாடுபூராகவும், இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ள 7வது ஜனாதிபதித் தேர்தலுக்காக வேண்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் சகல ஏற்பாடுகளும் பூர்தியடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் செயலம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் மத்திய நிலையமாகக் காணப்படும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரியிலிருந்து வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுக்கள் அடங்கலாக, மாவட்டத்திலுள்ள  414 வாக்களிப்பு நிலையங்களுக்கும் பலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் நேற்று புதன் கிழமை அனுப்பி வைக்கப் பட்டுள்ளன.

வாக்களிப்பு நிலையங்களில் கடமைபுரியும் உத்தியோகஸ்தர்கள், நேற்றயதினமே உரிய வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று கடமைகளைப் பெறுப்பேற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை 365163 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி பி.எஸ்எம்.சாள்ஸ் தெரிவித்தார்
இதில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியிலிருந்து 172497 பேரும், கல்குடா தேர்தல் தொகுதியிலிருந்து 105055 பேரும், பட்டிருப்பு தேர்தல் தொகுதியிலிருந்து 87611 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பும் பலப்படுத்தப் பட்டுள்ளதையும்,  அவதானிக்க முடிகின்றது.




























,

SHARE

Author: verified_user

0 Comments: