31 Jan 2015

இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு

SHARE
கலாபூசணம் மு.தம்பிப்பிள்ளை எழுதிய  வெற்றித்திருமகள், மனம் போல வாழ்வு,  எனும் இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் சனிக்கிழமை (31) நடைபெற்றது.

இந்நூல் வெளியீட்டு நிகழ்வை தென்றல் சஞ்சிiகயின் நிருவாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

பிரதேச செயலாளர் எஸ்.தனபாலசுந்தரம் தலமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான க.தங்கேஸ்வரி, த.கனகசபை களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியாசலையின் வைத்திய அத்தியட்சகர்  ஜி.சுகுணன் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் புண்ணியமூர்த்தி உட்பட இலக்கியவாதிகள் எழுத்தாளர்கள் கல்வியியலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நூல்களின் நயவுரையினை த.சேரலாதனும், ஏற்புரையினை எழுத்தாளர் கலாபூசணம் மு.தம்பிப்பிள்ளையும் நிகழ்த்தினர்.





SHARE

Author: verified_user

0 Comments: