டிசெம்பர் மாதம் முதலாம் திகதி உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி மட்டக்களப்பு
சிறைச்சாலையின் ஏற்பாட்டில், விழிப்புணர்வு பேரணி திங்கட்கிழமை (01) காலை
நடைபெற்றது.
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு முன்பாக ஆரம்பமாகிய இந்த பேரணி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைவரை சென்றது.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.ஏ.வி.பிரியங்கர, மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் ஏ.மோகன், சிறைச்சாலை நலன்புரி உத்தியோகஸ்தர்களான எம்.ஐ.எஸ்.சபீனா, பி.சுசிதரன், ஜே.சுதாகரன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களான பிரதிபா ஜோர்ட், ஏ.ஜே.பிரியா உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.
இதன்போது 'உணர்ச்சிக்கு அடிமையாகதீர்கள்', 'பாதுகாப்பற்ற பாலியல் உறவை தடுப்போம்', 'எய்ட்ஸ் நோயை தடுப்போம்', 'பாலியல் உறவுக்கு முன் சிந்தியுங்கள்' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை பேரணியில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு முன்பாக ஆரம்பமாகிய இந்த பேரணி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைவரை சென்றது.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.ஏ.வி.பிரியங்கர, மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் ஏ.மோகன், சிறைச்சாலை நலன்புரி உத்தியோகஸ்தர்களான எம்.ஐ.எஸ்.சபீனா, பி.சுசிதரன், ஜே.சுதாகரன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களான பிரதிபா ஜோர்ட், ஏ.ஜே.பிரியா உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.
இதன்போது 'உணர்ச்சிக்கு அடிமையாகதீர்கள்', 'பாதுகாப்பற்ற பாலியல் உறவை தடுப்போம்', 'எய்ட்ஸ் நோயை தடுப்போம்', 'பாலியல் உறவுக்கு முன் சிந்தியுங்கள்' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை பேரணியில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர்.
0 Comments:
Post a Comment