3 Dec 2014

டெங்கு நூளம்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பரிசோதனை

SHARE
டெங்கு நூளம்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பரிசோதனை

டெங்கு நுளம்புகள் பரபுவதற்கு ஏதுவான சூழலை வைத்திருந்த  அரச திணைக்களங்கள் அடங்கலாக 12 பேருக்கு எதிராக வழக்குகள் வழக்கு


மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பிரதேத்தில் டெங்கு நூளம்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் செவ்வாக் கிழமை (02) களுவாஞ்சிகுடி பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், பொது சுகாதார பரிசோதகர்கள், கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் விளையாட்டுக் கழகத்தினர் என பலரும் இணைந்து களுவாஞ்சிகுடி நகர் பகுதியில் சுற்றி வளைப்பிளையும், பரிசோதனைகளையும் மேற்கொண்டனர்.


இதன்போது கடைகள், கிணறுகள், வடிகான்கள், போன்றவற்றை பரிசோதனை செய்ததுடன் டெங்கு நுளம்புகள் பரபுவதற்கு ஏதுவான சூழலை வைத்திருந்தவர்களுக்கு  வழங்குகள் பதியப்பட்டும் எச்சரிக்கையும் விடுக்கபட்டன.


அந்த வகையில் டெங்கு நுளம்புகள் பரபுவதற்கு ஏதுவான சூழலை வைத்திருந்த  அரச திணைக்களங்கள் அடங்கலாக 12 பேருக்கு எதிராக வழக்குகள் வழக்குத் தாக்கல் செய்யப் பட்டுள்ளதாகவும். 6 பேருக்கு எச்சரிக்கை கடிதங்கள் வழங்கப் பட்டுள்ளதாகவும், களுவாஞ்சிகுடி பிரதேச பொது சுhகாதார பரிசோதகர் எஸ்.ரவிகரன் கூறினார்.



SHARE

Author: verified_user

0 Comments: