17 Dec 2014

கல்முனை தமிழ் பிரதேச செயலகம் நடாத்திய முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி பாதுகாப்பு வாரம் -2014

SHARE
(டிலாறா)

தேசிய சிறுவர் செயலகம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆகியவற்றின் ஊடக கல்முனை தமிழ் பிரதேச செயலகம் நடாத்திய முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி பாதுகாப்பு வாரம் -2014 சேனைக்குடியிருப்பு 'சேவோ' நிறுவனத்தில்; (16.12.2014) அன்று நடைபெற்றது. நிகழ்வில் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.தனலெட்சுமி முரசொலி மாறன்,  'சேவோ' நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி. கிரிஜா சத்தியநாதன், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.எஸ்.திருப்பதி, சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திருமதி. ஜி.ரேவதி, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.ஏ.எல்.எம்.சினாஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

சின்னஞ்சிறார்களின் கலைநிகழ்ச்சியும் இடம்பெற்றது. இறுதியாக மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.







SHARE

Author: verified_user

0 Comments: