மருதமுனை அஷ்-ஸம்ஸ் பாலர் பாசாலை நடாத்திய பாலர் கலை அரங்கம் -2014 முன்னாள் அதிபர் ஏ.எம்.ஏ.சமட் ஜே.பி தலைமையில் (14.12.2014) அன்று மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்வுகளுக்கு பிரதம அதிதியாக கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜெலீல் அவர்களும் கொளரவ அதிதியாக முஸ்லிம் ஆராய்ச்சி செயல் முன்னணியின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எஸ்.ஜெலீல் அவர்களும் விசேட அதிதிகளாக மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியின் அதிபர் எஸ்.எம்.எம். அமீர், முன்னாள் அதிபர் எஸ்.எல்.எம். ஜலால்தீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சின்னஞ்சிறார்களின் கலைநிகழ்ச்சி அரங்கில் நிறைந்திருந்த எல்லோரையும் வியக்க வைத்தது. இறுதியாக மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்வுகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர் ஏ.எல்.எம்.ஸினாஸ் தொகுத்து வழங்கினார்கள்.
0 Comments:
Post a Comment