24 Nov 2014

வாகரையில் கல்வி அபிவிருத்தி தொடர்பான விஷேட கூட்டம்

SHARE


மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேசத்தில் கல்வி அபிவிருத்தி தொடர்பான விஷேட கூட்டம் வாகரை மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் வித்தியாலய அதிபர் அரசரெத்தினம் தலைமையில் நேற்று ஞாயிற்றுக் கிழமை (23)  இடம் பெற்றது.

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தனின் பிரதான பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இக் கூட்டத்தில் வாகரை மகா வித்தியாலயத்தில் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் ஆசிரியர்கள் எதிர்நோக்கும்  பிரச்சனைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டன.

பாடசாலையில் ஆசிரியர்களின் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு பொற்ரோர்களின் ஒத்துழைப்பு குறைவுஇ மற்றும் மாணவர்கள் கையடக்கத் தொலைபேசிப் பாவனை அதனால் ஏற்படும் பின் விளைவுகள் தொடர்பாக ஆசிரியர்களினால் இதன்போது குறிப்பிடப்பட்டன.

இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன்………..

 2013ம் வருடம்  வாகரை மகா வித்திலயத்தில் 48 மாணவர்கள் கல்வி பொதுதர சhதhரண  பரீட்சையில் அதில் தோற்றி 5 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர் இது மிகவும் வேதனைக்குரிய விடயம்.  இன் நிலை தொடராவண்ணம் பார்க்க வேண்டியது ஆசிரியர்களின் கைகளிலும் பெற்றோர்களின் கைகளிலுமே தங்கியுள்ளது.

தொலைக்காட்சிக் பொட்டிகளுடன் காலாத்தினை செலவளிப்பதனை விடுத்து பெண்கள் பிள்ளைகளில் அக்கறை கொள்ள வேண்டும். வெறுமனே பிள்ளைகள் மீது அன்பு காட்டுவதனால் மாத்திரம் நல்லொழுக்க மாணவர்களினை உருவாக்க முடியாது. பாடசாலை சென்று வீடு வரும் பிள்ளையின் கொப்பிகளை பெற்றோர் பார்வையிட வேண்டும். அன்றைய பாடசாலை செயற்பாடு தொடர்பாக கலந்துரையாட வேண்டும் கையடக்க தொலைபேசிகளை சிறு பருவத்தில் வாங்கிக் கொடுப்பதனை தவிர்க்க வேண்டும். வறுமையையும் யுத்தத்தினையும் காரணங்காட்டிக் கொண்டு பிள்ளைகளின் எதிர்காலத்தினை தொலைக்க இடம் கொடுக்கக் கூடாது.

வாகரையில் இருந்து  அரச அதிகாரிகள் உருவாக்கப்பட வேண்டும் அதற்கு உட்கட்டமைப்பு வசதிகளை நான் செய்து தருவதற்கு தயாரக இருக்கின்றேன்.

எனவும் குறிப்பிட்டார்.  இந் நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ.பிரசாந்தன். வாகரை கிராம சேவையாளர்இ வலயக்கல்விப் பணிப்பாளர் சிறுவர் நன்நடத்தை உத்தியோகஸ்தர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்







SHARE

Author: verified_user

0 Comments: