19 Nov 2014

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலையில் இலவச கொரிய வைத்தியமுகாம்

SHARE

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலையில் இலவச கொரிய வைத்தியமுகாம் இன்று புதன்கிழமை காலை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலையில் இலவச கொரிய வைத்தியமுகாம் இன்று புதன்கிழமை (19) காலை ஆரம்பித்துவைக்கப்பட்டது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் 69வது பிறந்த தினத்தினை முன்னிட்டு உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சு மற்றும் கொரிய சர்வதேச கூட்டுத்தாபனமும் கிழக்கு மாகாண சுதேச ஆயுர்வேத திணைக்களமும் இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.

இதன் ஆரம்ப நிகழ்வு பட்டிருப்பு தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஸீர் சேகுதாவூத் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் கொரிய சர்வதேச கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் டாக்டர் கியூ, மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் எஸ்.சதுர்முகம், கிழக்கு மாகாண சுதேச ஆயுர்வேத திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் திருமதி ஆர்.ஸ்ரீதர், மட்டக்களப்பு பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சர் அனுர பண்டார ஹக்மன உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சகல விதமான நாள்பட்ட மற்றும் குறுகிய கால நோய்களுக்கு இந்த வைத்திய முகாமில் பல்வேறு சிகிச்சை முறைகளில் சிகிச்சையளிக்கப்படவுள்ளது. கொரிய மற்றும் இலங்கையின் வைத்தியர்கள் இந்த சிகிச்சை முகாம்களை நடாத்திவருகின்றனர்.

காலை 9.மணி முதல் பிற்பகல் 4.00மணிவரையில் நடைபெறும் இந்த வைத்திய முகாமானது நாளை வியாழக்கிழமை வரையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.

மூன்று தினங்களைக்கொண்டதாக நடாத்தப்பட்டுவரும் இலவச கொரிய வைத்திய முகாமானது நேற்று செவ்வாய்க்கிழமை ஏறாவூரில் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






SHARE

Author: verified_user

0 Comments: