19 Nov 2014

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் 69 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சேருவில பிரதேச செயலகத்தினால் விசேட பூசை

SHARE
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் 69 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்து சமய காலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சேருவில பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தங்கநகர் கிராம சேவகர் பிரிவிலுள்ள ஸ்ரீ செம்பகவல்லி அம்மன் ஆலயத்தில் 18-11-2014 செவ்வாய் கிழமை காலை 8.00 மணி அளவில் விசேட பூசை நிகழ்வு இடம் பெற்றது.

இந்நிகழ்விலே அதிதிகளாக பிரதேச சபை தவிசாளர் டப்ளியு.எம்.என்.பி.விஜேசிங்க, பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எஸ்.எ.ஜலில், செம்பகாவல்லி வித்தியாலய அதிபர் செ.கோணேசராசா, கலாசார  அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.தீபன் முரளிதரன், இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.சிறிப்பிரியா, மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆலய நிருவாகத்தினர், பாடசாலை மாணவர்கள் , பொதுமக்கள், என பலர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்விலே மர நடுகை வைபவமும் இடம் பெற்றது.









SHARE

Author: verified_user

0 Comments: