16 Feb 2014

ஆற்றல் பேரவையின் தலைவராகமீண்டும் பூ.பிரசாந்தன்

SHARE
(வராதன்)

மட்டக்களப்பு ஆற்றல் பேரவையின் தலைவராக முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மீண்டும் 2014/2015ம் வருடங்களுக்கான தலைவராக ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 

மேற்படி அமைப்பின் 2014/2015ம் வருடங்களுக்கான நிருவாகசபை தெரிவு கடந்த 13 அன்று ஆரைம்பதியில் நடைபெற்றது. அதன்போது தலைவராக முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்கள் தெரிவு செய்யப் பட்டுள்ளார். 

இந்நிருவாகத்தில் செயலாளர் பா.கிஸ்கந்தமுதலிஇ பிரதித் தலைவர்களாக ப.சிவசுந்தரம் இகுகதாஸ்இ இணைச் செயலாளராக விஜயராஜூ பொருளாளராக ஜேக்கப் இணைப் பொருளாளராக  ஆ.சிவராஜாஇகுழுக்களின் தலைவரும் ஆலோசகர்ருமாக மு.பஞ்சாச்சரம் கணக்காய்வாளராக த. மலர்ச்செல்வன் ஆகியோர் உள்ளிட்ட நிருவாக சபை உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள்.

வறியமாணவர்களுக்கான கல்விஅபிவிருத்திஇ இளைஞர் யுவதிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சிகள் உள்ளிட்ட சமூகப் பணிகளை மேற்கொண்டுவரும் ஆற்றல் பேரவை 5ம் தரபுலமைப் பரிசில் முன்னோடிவகுப்புக்கள்இ எழுதவாசிக்கத் தெரியாத மாணவர்களுக்கானவிஷேட வகுப்புக்கள் மற்றும் பாடசாலை செல்லாதமாணவர்களுக்களை பாடசாலை அனுப்புதல்இ வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கல் என கடந்தவருடங்களில் பலசெயற்திட்டங்களைமேற்கொண்டிருந்தது.

இவ் வருடமும் மிக வறுமையான மாணவர்களை தெரிவு செய்து கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு ஆற்றல் பேரவை அமைப்பினை இதன்போது தெரிவு செய்யப்பட்ட நிர்வாகத்தினர் தொடர்ந்து வரும் இரண்டு அண்டுகளுக்கு நிருவகிக்கும் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

SHARE

Author: verified_user

0 Comments: