20 Feb 2014

மட்டக்களப்பு மாநகரத்தினை அழகுபடுத்தும் செயற்றிட்டம்

SHARE
(சக்தி)

மட்டக்களப்பு மாநகரத்தினை அழகுபடுத்தும் முகமாக மட்டு.மாநகர ஆணையாளர் மாணிக்கம்-உதயகுமார் அவர்களின் பல்வேறுபட்ட வேலைத் திட்டத்தின் ஒரு நிகழ்வாக மட்டக்களப்பு பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதியினை அழகுபடுத்தும் வேலைத் திட்டம் நேற்று முன்தினம் (18) முன்னெடுக்கப் பட்டுள்ளது.
இதன்போது மேற்படி பொதுச் சந்தைக்கட்டிடத் தொகுதியினை துப்பரவு செய்து பூமரங்கள் நட்டு அழகுபடுத்தப்பட்டன.
பொதுச்சந்தை மேற்பார்வையார் சோமசுந்தரம்-சூரியகாந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகரசபையின் வரி வசூலிப்பாளர் கணபதிப்பிள்ளை-பரணிதரன் அவர்கள் உட்பட மாநகர சபை ஊழியர்கள், என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

SHARE

Author: verified_user

0 Comments: