(சக்தி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று இளைஞர் கழக சம்மேளனத்தின் 2014 ஆம் ஆண்டிற்கான இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் குழு நிலைப் போட்டிகள் ஆரையம்பதி மகாவிததியாலைய மைதானத்தில் மண்முனைப் பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் சுதன் அவர்களின் தலைமையில் நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில் ஆண்களுக்கான கிறிக்கட் சுற்றுப்போட்யினை நேற்று முன்தினம் சனிக்கிழமை (08) முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் அவர்கள் கலந்து கொண்டு உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இதில் மண்முனைப் பற்று இளைஞர் கழக சம்மேளனத்தின் கீழுள்ள இளைஞர் கழகங்கள் பங்கெடுக்கின்றமை குறிப்பிடத் தக்கதாகும்.
0 Comments:
Post a Comment