20 Jan 2014

காணி, பொலிஸ் அதிகாரத்துடன்,சுய நிர்ணய உரிமையுடன் கூடிய ஆட்சியினை அமைப்பதற்கு தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்- ஜனா

SHARE
(சக்தி)

எமது கிழக்கு மாகாணத்தில் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் , சுய நிர்ணய உரிமையுடன் கூடிய ஆட்சியினை அமைப்பதற்கு, எமது உரிமைகளைப் பெறும் வரைக்குமாவது, தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.

என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பிருமான கோவிந்த கருணாகரம் (ஜனா) அவர்கள் தெரிவித்துள்ளார். 

இன்று (20) மட்டக்களப்பு-செட்டிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள சிவன் ஆலய பரிபாலன சபையினால் “சிவன் கிட்ஸ் ஹோம்” எனும் பாலர் பாடசாலை ஒன்று திறந்து வைக்கப் பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு 

உரையாற்றுகையிலேதான் அவர் இவ்வாறு தெரிவித்தார்
அங்கு அவர் தெடர்ந்து கருத்து தெரிவிக்குகையில்
இலங்கை அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசவேண்டும் என்று கூறிக்கொண்டும், பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வருமாறும், அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றது. இந்த தேசியப் பிரச்சனைக்கு தீர்வு காணும் முகமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் மாத்திரம்தான் பேச வேண்டும் என்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

கடந்த வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் திரண்டெழுந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு முழு ஆதரவையினையும் கொடுத்ததிற்காக உலகமே ஒரு கணம் வியந்து பார்த்தது. இது தமிழ் மக்கள் ஒன்றாக நிற்கின்றோம் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதனையெல்லம் வட பகுதி மக்கள் எடுத்துக் காட்டினார்கள்.

கிழக்கு மகாகாணத்தில் நடைபெற்ற கடந்த மாணாகசபைத் தேர்தலில் எமது மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இன்னும் பத்தாயிரம் வாக்குகளை அளித்திருந்தால் இந்த கிழக்கு மாகாண சபையினையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து வடமாகாணசபை போன்று கிழக்கிலும் எமது மக்களுக்காக வேண்டி போராடியிருப்போம்.

இன்று தமிழ் மக்கள் தமிழ் தேசியத்துடனேயே இருக்கின்றார்கள் இதனை எமது மக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கடந்த 1989 ஆம் ஆண்டிலிருந்து 1994 ஆம் அண்டுவரை பாராளுமன்றத்திலிருந்து மக்களின் அபிலாசைகளை எடுத்துரைத்தேன், அதன் பின்னர் நான் இந்த நாட்டில் இருப்பதற்கு உகந்த சூழல் இல்லாத காரணங்களினால் நான் வெளிநாடு சென்று வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலமை ஏற்பட்டது.

தற்போது நான் 17 வருடம் கழிந்த பின்னர் எனது தய் நாட்டிற்கு மீண்டும் திரும்பி வந்து கடந்த 2012 ஆம் அண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக போட்டியிட்டேன். மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எனக்கு 14500 வாக்குகளை அளித்து என்னையும் தெரிவு செய்து மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு கிழக்கு மாகாணசபைக்கு அனுப்பியுள்ளார்கள். இதுதான் தமிழ் மக்கள் தமிழ் தேசியத்துடன் இருக்கின்றார்கள் என்பதற்கு ஒரு சிறந்த ஒரு உதாரணமும் எடுத்துக் காட்டுமாகும்.

எதிர் காலத்தில தமிழ் போசும் மக்கள் வடக்கு கிழக்கில் ஒன்றாக இருந்து செயற்பட்டு எமது பலத்தினையும் ஒற்றுமையினையும் இந்த நாட்டிற்கும் , இந்த அரசிக்கும் எடுத்துரைக்க வேண்டும்.

தமிழ் மக்கள் இவ்வளவு காலமும் இழந்தவைகளைப் பெறவேண்டுமாக இருந்தால் தமிழ் பேசும் மக்களாகிய நாங்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். எமது கிழக்கு மாகாணத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் மிகவும் அன்னியோன்னியமாக பக்கத்து , பக்கத்து, கிராமங்களிலும் , பக்கத்து பக்கத்து, வீடுகளிலும் வசித்து வருகின்றார்கள். 

தமிழ் போசும் சமூகம் ஒன்றுமையுடன் செயற்பாட்டு எமது சுய நிர்ணய உரிமைகளைப் பெற்று எமது பிரதேசத்தினை குறிப்பாக வடக்கு கிழக்கு மாகணத்தினை ஆள்வதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
இந்த ஒற்றுமை இல்லாத காரணங்களினால்தான் எமது நிலங்கள் இன்று பறிக்கப் படடுகின்றன, எமது கலாசாரங்கள் மாற்றப்படுகின்றன, கிராமங்கள் தோறும் புத்தர் சிலைகள் முளைக்கின்றன, கிராமங்களில் வெள்ளரசு மரம் நிற்கின்றன அவற்றினைப் பார்த்தால் பயம் வருகின்றன, ஏனெனில் அந்த மரங்களின் கீழ் பத்தர் சிலைகள் முளைத்துவிடும் என்று.

எனவே எமது மாகாணத்தில் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் , சுய நிர்ணய உரிமையுடன் கூடிய ஆட்சியினை அமைப்பதற்கும் எமது உரிமைகளைப் பெறும் வரைக்குமாவது தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.

தமிழ் பேசும் மக்களாகவே இருக்க வேண்டும், நாங்கள் எல்லாம் ஒன்றாக இருந்து உரிமைகளைப் பெறவேணடும் என வேண்டுகின்றேன். என அவர் தெரிவித்தார்.  

SHARE

Author: verified_user

0 Comments: